Prayer For Cure from Stammering and Other Speaking Troubles
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க! ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் அக்குறை நீங்கப் பாடவேண்டிய அருட்பாடல்களிவை. ஈழநாட்டுப் பௌத்தமன்னன் துணையுடன் தில்லைவாழ் அந்தணருடன் வாது செய்ய வந்த பௌத்தகுருவுடன் தில்லைவாழ் அந்தணர் சார்பாக மணிவாசகப் பெருமான் நடத்திய வாதின் போது அருளிய பாடல்களிவை. அவ்வமயம் அருகிலிருந்த ஈழமன்னனின் ஊமை மகள் மணிவாசகரால் ஒளிபெற்று ஒலிபெற்றுத் தன் திருவாயாலேயே வினாவிடை போல் பௌத்தகுரு தொடுக்கவிருந்த வாதுப் பொருளையெல்லாம் தானே பாடி தெளிவித்ததாய் வரலாறு. இதனை திருச்சாழலின் பாடல்வரிகளூடே அறியலாம். பின்னர் […]