Prayer For Cure to Eyesight Deficiency, Blindness, Eye Related Diseases
நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க! விழியொளி பெற வேண்டிப் பாடும் பதிகம் வன்றொண்டர் சுந்தரர் சாரூப முக்தியெனும் சஹமார்க்கத்தைச் சுட்ட வந்த திருஅவதாரம். மீண்டுவாரா சன்மார்க்கமெனும் பரமுக்திக்கு முந்தைய சஹமார்க்கத்தில் யோகமும் உண்டு; போகமும் உண்டு. போகத்தின் உச்சத்தையும் உணர்த்தும் பொருட்டு அவருடன் கயிலையிலிருந்து இறங்கி வந்தவரே அவர்தம் துணைவியரான பரவையாரும், சங்கிலியாரும். தம்பிரான் தோழரென்று வழங்கப் பட்டாலும் இந்த இரண்டு பெண்டிரிடை அலைக்கழித்து இறுதியில், ‘வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம், பாழ்போவது பிறவிக்கடல்’ (78-1) […]