Templesinindiainfo

Best Spiritual Website

Pathigam Hymn | Panthar Viralmadavaḷ Pakama Lyrics in Tamil

Saint Thirugnanasambanthar visited this temple and sang this Pathigam. Devotees visiting this temple should make it a practice to recite this Pathigam.

Panthar Viralmadavaḷ Pakama Lyrics in Tamil:

பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தார் அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண்சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் தெளியொளிரத் தேமாக்கனி யுதிர்க்குந் திருநணாவே ॥ 1 ॥

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணை யேந்தி
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா னிடம்போலு மிலைசூழ் கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூ ழோசைச்
சேட்டார் மணிகள் அணியுந் திரைசேர்க்குந் திருநணாவே ॥ 2 ॥

நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலமேத்த
மின்தாங்கு செஞ்சடையெம் விகிதர்க்கிடம்போலும் விரைசூழ்வெற்பில்
குன்றோங்கி வன்திரைகள் மோத மயிலாலுஞ் சாரற்செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந் திருநணாவே ॥ 3 ॥

கையில் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் கிடம்போலு மிடைந்து வானோர்
ஐயஅரனே பெருமான் அருளென்றென் றாதரிக்கச்
செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருநணாவே ॥ 4 ॥

முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தாரிடம்போலுஞ் சோலைசூழ்ந்த
அத்தேன் அளியுண் களியா லிசைமுரல ஆலத்தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருநணாவே ॥ 5 ॥

வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடங்கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியுமானும்
அல்லாத சாதிகளு மங்கழல்மேற் கைகூப்ப அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருநணாவே ॥ 6 ॥

கானார் களிற்றுரிவை மேல்மூடி ஆடரவொன் றரைமேற்சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் தானுகந்த கோயிலெங்கும்
நானா விதத்தால் விரதிகள் நல்நாமமே யேத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண் டடியார் அடிவணங்குந் திருநணாவே ॥ 7 ॥

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் கிடம்போலும் முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே ॥ 8 ॥

மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகடோறும்
கையார் பலியேற்ற கள்வன் இடம்போலுங் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமியளந்தானும் போற்ற மன்னிச்
செய்யார் எரியாம் உருவமுற வணங்குந் திருநணாவே ॥ 9 ॥

ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல்பேசி
மூடு ருவம்உகந் தார்உரை யகற்றும் மூர்த்திகோயில்
ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்தகிலுங் கரையிற்சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றியொளி பெருகுந் திருநணாவே ॥ 10 ॥

கல்வித் தகத்தால் திரைசூழ் கடற்காழிக் கவுணிசீரார்
நல்வித் தகத்தால் இனிதுணரும் ஞானசம் பந்தன் எண்ணும்
சொல்வித் தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே ॥ 11 ॥

Also Read:

Panthar Viralmadavaḷ Pakama Lyrics in English | Tamil

Pathigam Hymn | Panthar Viralmadavaḷ Pakama Lyrics in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top