Templesinindiainfo

Best Spiritual Website

Pathigam Hymn | Thonde Lamalar Thuvi Lyrics in Tamil

Saint Thirugnanasambanthar visited this temple and sang this Pathigam. Devotees visiting this temple should practice reciting this Pathigam.

Thonde Lamalar Thuvi Lyrics in Tamil:

தொண்டெ லாமலர் தூவி ஏத்தநஞ் சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை அண்ட னாரரு ளீயும் அன்பரே ॥ 1 ॥

நீதி யார்நினைந் தாய நான்மறை ஓதி யாரொடுங் கூட லார் குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை ஆதி யாரடி யார்தம் அன்பரே ॥ 2 ॥

விண்ணு லாமதி சூடி வேதமே பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை அண்ண லாரடி யார்க்கு நல்லரே ॥ 3 ॥

முடியர் மும்மத யானை யீருரி பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியு ளார்கரு வூரு ளானிலை அடிகள் யாவையு மாய ஈசரே ॥ 4 ॥

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர் மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யர்கரு வூரு ளானிலை அங்கை யாடர வத்தெம் மண்ணலே ॥ 5 ॥

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலைமூவ ராகிய மொய்ம்ப ரல்லரே ॥ 7 ॥

பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப் பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை நண்ணி னார்நமை யாளும் நாதரே ॥ 8 ॥

கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்தலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே ॥ 9 ॥

உழுது மாநிலத் தேன மாகிமால் தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை முழுது மாகிய மூர்த்தி பாதமே ॥ 10 ॥

புத்தர் புன்சமண் ஆதர் பொய்யுரைப் பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே ॥ 11 ॥

கந்த மார்பொழில் காழி ஞானசம் பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர் சிந்தை யில்துய ராய தீர்வரே ॥ 12 ॥

Also Read:

Thonde Lamalar Thuvi Lyrics in English | Tamil

Pathigam Hymn | Thonde Lamalar Thuvi Lyrics in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top