Templesinindiainfo

Best Spiritual Website

appaiya dhikshthar

Sivarchana Chandrikai – Sivaagama Pujai Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சிவாகம பூசை செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை சிவாகம பூசை செய்யும் முறை காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களே சிவஞானங்களெனப்படும். அவற்றுள், காமிகம், மூன்று பேதத்துடன் பரார்த்தங்கிரந்தங்களையுடையது, யோகஜம், ஐந்து பேதத்துடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது, சிந்தியம், ஆறு பேதத்தடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது, காரணம், ஏழு பேதத்துடன் கோடி கிரந்தங்களையுடையது, அஜிதம், நான்கு பேதத்துடன் லக்ஷஙகிரந்தங்களையுடையது, தீப்தம், ஒன்பது பேதத்துடன் லக்ஷங்கிரந்தங்களையுடையது, சூக்குமம், ஒரு பேதத்துடன் பத்மமென்னுங் கிரந்தங்களையுடையது, சகஸ்கரம், பத்துப் […]

Sivarchana Chandrikai – Agni Kariyam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – அக்கினிகாரியஞ் செய்யுமுறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை அக்கினிகாரியஞ் செய்யுமுறை இவ்வாறு பரமேசுவரனைத் தோத்திரம், பிரதக்ஷிணம், நமஸ்காரமுதலியவற்றால் திப்தியடையும்படி செய்து, ஓ சுவாமின்! யான் அக்கினி காரியஞ் செய்கின்றேன் என்று தெரிவித்துப் பரமசிவனிடமிருந்து ஆணையைப்பெற்றுச், சாமான்யார்க்கிய பாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அக்கினியிருக்கும் ஓமகுண்டத்திற்குச் சென்று, நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகளால் சுத்தமாயும், ஒருமுழ அளவுள்ளதாயும், மண், மணலென்னுமிவற்றுள் யாதானுமொன்றால் செய்யப்பட்டதாயுமிருக்கும் இடத்தில் அரணிக்கட்டை, சூரியகாந்தமென்னுமிவற்றால் செய்யப்பட்டதாகவாவது, அக்கினிகாரியஞ் செய்பவர் வீட்டிலிருந்து […]

Sivarchana Chandrikai – Namaskaram Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நமஸ்காரஞ் செய்யுமுறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நமஸ்காரஞ் செய்யுமுறை நமஸ்காரமாவது அட்டாங்கம், பஞ்சாங்கம், திரியங்கம், ஏகாங்கமென நான்கு வகைப்படும். அவற்றுள், அட்டாங்கமானது தண்டமென்றும், தனியென்றும் இருவகைப்படும். அவற்றுள், தண்டமென்னும் அட்டாங்க நமஸ்காரமாவது – கால்களிரண்டும், கைகளிரண்டு, மார்பு, சிரசு ஒன்று, வாக்கொன்று மனமொன்று ஆகிய எட்டுறுப்புக்களாலுஞ் செய்யப்படுவது. இது ஒருபக்கம். கால்கள், கைகள், மார்புகள், சிரசு, வாக்கு, மனம், புத்தி, பார்வை, யென்னும் இவற்றால் செய்யப்படுவதென்பது மற்றொரு பக்கம். […]

Sivarchana Chandrikai – Pradakshinam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – பிரதக்ஷிணஞ் செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை பிரதக்ஷிணஞ் செய்யும் முறை இவ்வாறு தோத்திரஞ் செய்து, புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து, சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து, மூன்று முறை பிரதக்ஷிணஞ் செய்து ஐந்து முறை நமஸ்கரித்து, மீண்டும் பிரதக்ஷிணஞ் செய்யவேண்டும். பூசைக்குப் பலன் சித்திப்பதன் பொருட்டுப் பிரதக்ஷிணம் இன்றியமையாதது. பிரதக்ஷிணம் நான்கு அங்கங்களுடனிருக்கும். அவை வருமாறு:- (அ) அடிமேல் அடி வைத்துச் செல்லுதல். (ஆ) இருகைகளையுங் கோர்த்துக் கொள்ளுதல். (இ) வாயால் […]

Sivarchana Chandrikai – Karppooradheebam Samarppikkum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை கருப்பூரதீபஞ் சமர்ப்பிக்கும் மறை சுவா¢ண முதலியவற்றால் செய்யப்பட்டவையாயும், வட்டமான வடிவம் அல்லது நான்கு முக்குச் சதுரமான வடிவத்தையுடையவையாயும், மொட்டை நுனியிலுடைய தண்டுடன் கூடினவையாயும், இயல்பாகவேனும் மாவினாலேனும் செய்யப்பட்ட தீபாசனங்களுடன் கூடினவையாயும், தீபாசனங்களில் வைக்கப்பட்ட கற்பூரத்திலாவது திரிகளிலாவது ஏற்றப்பட்ட தீபத்தையுடையவையாயும் உள்ள கருப்பூர நீராசன பாத்திரங்களுடன் நீராசனத்தையும் நிரீக்ஷண முதலியவற்றால் சுத்திசெய்து, ஆராத்திரிகம் போலவே இவற்றையும் சுற்றிச் சமர்ப்பித்துப் பூமியில் வைத்து […]

Sivarchana Chandrikai – Aarathi Samarpikkum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – ஆரத்தி சமர்ப்பிக்கும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை ஆரத்தி சமார்ப்பிக்கும் முறை சுவர்ணம் வெள்ளி செம்பு வெண்கலமென்னுமிவற்றுள் யாதானும் ஒன்றால் செய்யப்பட்டதாயும், இருபத்துநான்கு அங்குல அளவுள்ளதாயும், அல்லது அதற்குப் பாதியளவுள்ள தாயும், குறித்த அளவில் மூனறிலொரு பங்கு அளவுள்ளதும், ஐந்திலொரு பங்கு உயரமுடையதும், இரண்டு வால் நெல்லளவு உயரமுடைய பட்டிகையையுடையதுமான கர்ணிகையினால் சோபிக்கப்பட்டதாயும், அந்தக் கர்ணிகைக்கு வெளியில் எட்டுத் தளங்களுடன் கூடினதாயும், நான்கு பக்கங்களிலும் கர்ணிகை அளவான ஓஷ்டத்துடன் […]

Sivarchana Chandrikai – Mugavaasam in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – முகவாசம்: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை முகவாசம் பின்னர் முகவாசமென்னும் தாம்பூலமாத்திரை, தாம்பூல மென்னுமிவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். உண்டபின்வாய் வாசனையடையும் பொருட்டு வாயில் எதனைஉபயோகித்துக்கொள்கின்றோமோ அதுதான் முகவாசமாகும். அது ஏலம், லவங்கம், தத்கோலம், சாதிக்காய், பச்சைக்கருப்பூரமென்னும் இவற்றைப் பொடியாக்கிப் பனி நீரால் உருண்டையாகச் செய்து வைத்துக் கொள்ளப்படுவதாகும். ஏலம், லவங்கம், தக்கோலம், சாதிக்காய், பச்சைக்கருப்பூரமென்னும் இவற்றின் பொடிகளுடன், சிறிது தேனும் சருக்கரையும் கலந்து முகவாசம் செய்வது உத்தமம். இது […]

Sivarchana Chandrikai – Neivethiyathai Yetrukkollum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நைவேத்தியத்தை யேற்றுக்கொள்ளு முறை சதாசிவர் எந்த முகத்தினால் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுகறாரெனின், மேல் நோக்யி ஊர்த்துவ முகத்தால் ஏற்றுக்கொள்ளுகிறாரென்க. சர்வஞானோத்திரத்தில் “தின்னக் கூடிய பொருள்களையும் உண்ணக்கூடிய அன்னத்தையும், பருகக்கூடியதையும், இன்னும் அநேகவிதமான நாவாலுண்ணக்கூடியது உரிஞ்சக்கூடியதுகளையும், சதாசிவருடைய ஊர்த்துவ முகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருக்கின்றமை காண்க. துவிசதியென்னும் நூலில் “ஓ சப்ரமண்யரே! பக்ஷியம் போஜ்யம் பேயம் லேகியம் சோஷியம் என்னுமிவ்வைந்தினையும் […]

Sivarchana Chandrikai – Samarpikkum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நைவேத்தியஞ் சமர்ப்பிக்கும் முறை ஈசுவரனுக்குப் பாத்தியம் ஆசமனீயம் அருக்கியமென்னு மிவற்றைக்கொடுத்து, அவருக்கு முன்னர்க் கோமயத்தால் சதுரச் சதுரமாக ஒரு மண்டலமிட்டு, மாப்பொடிகளால் கோலமிட்டு, சுத்தான்னம் பாயசான்ன முதலியவற்றால் நிரம்பப் பெற்ற பாத்திரங்களும், வாழைப்பழம் தேங்காய் மாம்பழம் பலாப்பழம் திரா¬க்ஷப்பழம் பேரிச்சைப்பழம் முதலிய பழங்களாலும், லட்டு, கஸ்தூரி சேர்ந்த பிட்டு மோதகம் அப்பம் என்னுமிவற்றாலும், வாழை பலா என்னும் இவற்றாலாய கறிகளாலும், […]

Sivarchana Chandrikai – Neivethiyam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – நைவேத்தியஞ் செய்யும் முறை: ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை நைவேத்தியஞ் செய்யும் முறை நைவேத்தியத்திற்கு விரீகியென்னும் செந்நெல்லரிசி, சாலியென்னும் சம்பாநெல்லரிசி, பிரியங்கு என்னும் தானியத்தினரிசி, நீவாரமென்னும் வனநெல்லினரிசி, கோதுமையினரிசி, மூங்கிலரிசி, வால்நெல்லரிசி யென்னுமிவை மேலானவையாம். அவற்றுள், செந்நெல் அரிசி அதமம். சம்பாநெல்லரிசி மத்திமம். ஏனைய அரிசிகள் உத்தமம். அவற்றுள்ளும் பிரியங்குவின் அரிசியும், நீவாரமென்னும் வனநெல்லரிசியும், கோதுமையரிசியும், மூங்கிலரிசியும் முறையே நூறு, ஆயிரம், இலட்சம், அநந்தமென்னும் பலன்களை யுடையனவாய் ஒன்றுக்கொன்று மேலானவையாம். […]

Scroll to top