preloader
Sat. Apr 18th, 2026

சிவார்ச்சனா சந்திரிகை – முகவாசம்:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
முகவாசம்

பின்னர் முகவாசமென்னும் தாம்பூலமாத்திரை, தாம்பூல மென்னுமிவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். உண்டபின்வாய் வாசனையடையும் பொருட்டு வாயில் எதனைஉபயோகித்துக்கொள்கின்றோமோ அதுதான் முகவாசமாகும். அது ஏலம், லவங்கம், தத்கோலம், சாதிக்காய், பச்சைக்கருப்பூரமென்னும் இவற்றைப் பொடியாக்கிப் பனி நீரால் உருண்டையாகச் செய்து வைத்துக் கொள்ளப்படுவதாகும். ஏலம், லவங்கம், தக்கோலம், சாதிக்காய், பச்சைக்கருப்பூரமென்னும் இவற்றின் பொடிகளுடன், சிறிது தேனும் சருக்கரையும் கலந்து முகவாசம் செய்வது உத்தமம். இது ஐந்து வாசனைத் திரவியங்கள் சேர்ந்தது. இதற்குப் பஞ்சசௌகந்திகமென்பது பெயர். ஒன்றும் சேராமல் தனிப்பச்சைக்கருப்பூரம், சாதிக்காய், லவங்கம், தக்கோலமென்னும் இவற்றின் பொடிகள் மத்திமம், பிரஸ்தம் அளவுள்ள நைவேத்தியத்திற்கு வெட்டப்பட்ட மிருவான பாக்குத் துண்டுகளும், அடியும் நுனியும் கிள்ளப்பட்ட வெற்றிலை நாற்பத்தாறும், அல்லது பாக்கை நோக்க நான்கு அல்லது மூன்று அல்லது இரண்டு மடங்கு அதிகமானவெள்ளை வெற்றிலைகளும், சுண்ணமும், அகிய எல்லாவற்றையும் பச்சைக்கருப்பூரம் முதலியன, நன்றாய்ப் பக்குவமான தேங்காய், குமட்டி மாதுளம்பழம் என்னுமிவற்றுடன் கூட நிவேதனம் செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *