preloader
Fri. Aug 7th, 2026

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
இரண்டாவது ஆவரண பூசை

அநந்தாய பூமிசகிதாய நம:, சூக்ஷ¨மாய சுவாக சகிதாய நம:, சிவோத்தமாய ஸ்வதாசகிதாய நம:, ஏகநேத்திராய க்ஷ£ந்தி சகிதாய நம:, ஏகருத்திராய புஷ்டிசகிதாய நம:, திரிமூர்த்தயே ஸ்ரீசகிதாய நம:, ஸ்ரீகண்டாய கீர்த்தி சகிதாய நம:, சிகண்டினேமேதா சகிதாய நம: என்று சொல்லிக்கொண்டும், சுவர்ணம், அக்கினி, மேகம், வண்டு, பாணம், பனி, பவளம், படிகம் என்னுமிவற்றின் வர்ணங்களையுடையவர்களாயும், வரதம், அபயம், ஞாமுத்திரை, உருத்திராக்கமாலை என்னுமிவற்றைத் தரிப்பவர்களாயும், மூன்று கண்களையுடையவர்களாயும், சிவஞானத்தை வெளிப்படுத்துகிறவர்களாயும், தத்தம் சத்திகளுடன் கூடினவர்களாயும், இருக்கும் வித்தியேசுவரர்களைப் பூசிக்கின்றேனென்று சொல்லிக்கொண்டும், கிழக்குமுதலாகவும் ஈசான முதலாகவும் முறையே திக்கு உபதிக்குக்களிலாவது, கிழக்கு முதுற்கொண்டு ஈசான கோணம் வரையுள்ள இடங்களிலாவது பூசிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *