preloader
Fri. May 29th, 2026

சிவார்ச்சனா சந்திரிகை – அலங்காரம்:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அலங்காரம்

நூறு எண் முதலிய சுவர்ணபுஷ்பங்களால் செய்யப்பெற்ற மாலைகளும், ஆயிரம் முதலிய நீலோற்பல மலர்களாற் செய்யப்பெற்ற மாலைகளும், அலரி, வெண்டாமரை, விஜயம், அசிதம், பாடலம், புன்னாகம், வெள்ளைமந்தாரம், நாககேசரம், சண்பகமென்னும் இவற்றின் பூக்களாற் செய்யப்பெற்ற மாலைகளும் சிறந்தனவாகும். இடையிடையே பலவித நிறங்களையுடைய புஷ்பங்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளைப் பார்வதி தேவியாருடைய ஆசனத்தின் இருபக்கங்களிலும் நிறையக் கட்ட வேண்டும். இலிங்கத்தின் சிரசில் இரத்தினம், சுவர்ணங்களாலாவது, பூக்களாலாவது செய்யப்பெற்ற ஒன்று அல்லது, இரண்டு, மூன்று, நான்கு வரிசைகளையுடைய இண்டையென்னும் பெயருடைய வட்டமான மாலையைக் கையால் சமா¢ப்பிக்க வேண்டும். இவ்வாறு புஷ்போபசாரம் செய்த பின்னர் தூபதீபபோபசாரம் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *