Templesinindiainfo

Best Spiritual Website

Thaye Yasodha Unthan Ayar Kulathu udhitha mayan Gopala Krishnan Seyyum Lyrics in Tamil

Shri Krishna Song: தாயே யசோதா (alt:யசோதே) உந்தன் ஆயர் Lyrics in Tamil:

தாயே யசோதா (alt:யசோதே) உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி

தையலை கேளடி உந்தன் பையனை போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை

காலினில் சிலம்பு கொஞ்சக்-கைவளை குலுங்க – முத்து
மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ
(alternate :காலசைவும் கையசைவும் தாளமோடிசைந்து (=தாளமோடு இசைந்து) வர)
நீல வண்ணக் (alt: மேக) கண்ணன் இவன் நர்த்தனம் (alt: நர்த்தம்) ஆடினான்

பாலன் என்று தாவி (alt: வாரி ) அணைத்தேன் -அணைத்த என்னை
மாலை இட்டவன் போல் வாயில் முத்தம் இட்டாண்டி
பாலன் அல்லடி உன் மகன் ஜாலம் மிக (alt: ஜாலமாக) செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல (alt: சொன்னால்) நாணம் மிக ஆகுதடி

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் -ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால் (alt: +தான்) விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்து (alt: பற்றிழுத்து) போராடினான்

அந்த வாசுதேவன் இவன்தான் -அடி யசோதா /யசோதே (alt: அந்த வாசுதேவனை நானும்)
மைந்தன் என்று எடுத்தணைத்து (alt: தொட்டிழித்து) மடிமேல் (alt :மடியில்) வைத்து
சுந்தர முகத்தைப் பார்க்கும் வேளையிலே வாய் திறந்து (alt: சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம் )
இந்திரஜாலம் போலவே (alt:போலே/போல்)_இரெழுலகம் காண்பித்தான் (alt: அந்தரம் வைகுண்டமோடு எல்லாம் காட்டினான்)

Thaye Yasodha Unthan Ayar Kulathu udhitha mayan Gopala Krishnan Seyyum Lyrics in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top