Shivarchana

Sivarchana Chandrikai – Sulli Omam Seiyum Murai in Tamil

சிவார்ச்சனா சந்திரிகை – சுல்லி ஓமம் செய்யும் முறை:

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
சுல்லி ஓமம் செய்யும் முறை

அடுப்பை நிரீக்ஷணம் முதலியவற்றால் சுத்திசெய்து, அடுப்பிலிருக்கும் அக்கினியை பூரகம், கும்பம் என்னும் இவற்றால் விந்துத்தானம், நாபித்தானங்களில் சேர்த்துப் பவுதிகமான அக்கினியையும், விந்து சம்பந்தமான அக்கினியையும், ஜாடராக்கினியையும் ரேசகத்தால் வெளியே கொண்டுவந்து, பிங்கலை நாடியினால் சுல்லி காக்கினியில் வைத்து, அதன் பின்னர் அக்னயே நம:, சோமாய நம:, சூர்யாய நம:, பிரஹஸ்பதயே நம:, பிரஜாபதயே நம:, சர்வேப்யோ தேவேப்யோ நம:, சர்வேப்யோ விச்வேப்யோ நம:, அக்னயேஸ்விஷ்டகிருதே நம: என்று சொல்லிக் கொண்டு அக்கினியில் அக்கினிதிக்கு முதல் கிழக்கு ஈறாக அக்கினி முதலாயினாரைப் பூசித்து ஸ்வாஹா என்னும் பதத்தை இறுதியிலுடைய அந்த அந்த மந்திரங்களால் ஓமம் செய்து அந்தத் தேவர்களனைவரையும் அனுப்புதல் வேண்டும்.

Add Comment

Click here to post a comment